Sunday, October 19, 2008

ஔவையார் நூல்கள் -- மூதுரை

மூதுரை
வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு.
நூல்
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்றுதளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்தலையாலே தான் தருதலால். 1நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்நீர் மேல் எழுத்துக்கு நேர். 2இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்இன்னா அளவில் இனியவும்- இன்னாதநாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமேஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்குசுட்டாலும் வெண்மை தரும். 4அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றிஎடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்தஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்பருவத்தால் அன்றிப் பழா. 5உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்தளர்ந்து விளையுமோ தான். 6நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்றநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்குலத்து அளவே ஆகும் குணம். 7நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்கநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடுஇணங்கி இருப்பதுவும் நன்று. 8தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்றதீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடுஇணங்கி இருப்பதுவும் தீது. 9நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றிஏற்ற கருமம் செயல். 11மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிதுமண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்உண்ணீரும் ஆகி விடும். 12கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவேநீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறியமாட்டாதவன் நன் மரம். 13கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழிதானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி. 14வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரிஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்கல்லின் மேல் இட்ட கலம். 15அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்வாடி இருக்குமாம் கொக்கு. 16அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவேஒட்டி உறவார் உறவு. 17சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்றுஅல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரியபொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்நாழி முகவாது நானாழி-தோழிநிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்விதியின் பயனே பயன். 19உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டாஉடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவாமாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்அம் மருந்து போல் வாரும் உண்டு. 20இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லைஇல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்புலி கிடந்த தூறாய் விடும். 21எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்முற்பவத்தில் செய்த வினை. 22கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்துநீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமேசீர் ஒழுகு சான்றோர் சினம். 23நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்காக்கை உகக்கும் பிணம். 24நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்கரவிலா நெஞ்சத் தவர். 25மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லியவாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமேஇல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்மனம் சிறியர் ஆவரோ மற்று? 28மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்லஉருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தைஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்துபோம் போது அவளோடும் போம். 29சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரைஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்துமறைக்குமாம் கண்டீர் மரம். 30மூதுரை முற்றிற்று

ஔவையார் நூல்கள் -- நல்வழி

நல்வழி

வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் பெற்ற பெயர். கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல்.

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

நூல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து. 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? 22

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40

நல்வழி முற்றிற்று

ஔவையார் நூல்கள் -- கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன.

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

நூல்

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

ககர வருக்கம்

14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

சகர வருக்கம்

26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்

நகர வருக்கம்

48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை
51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர் ஆகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை

பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு

வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

கொன்றை வேந்தன் முற்றிற்று

ஔவையார் நூல்கள் -- ஆத்தி சூடி

ஆத்தி சூடி

பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 109 ஒருவரிப்பாடல்கள் உள்ளன. உயர்ந்த ஒழுக்க விதைகள் மனத்தின் ஊன்றுவதற்காக ஒளவையாரல் எழுதப்பெற்றன.

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.

நூல்

உயிர் வருக்கம்

1. அறஞ் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்

14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல்வளை
16. சனி நீராடு
17. ஞயம் பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணககம்அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம்ஆடேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்

32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப்பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்திரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சை எனத் திரியேல்
53. சொல் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெல் பயிர் விளை
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93 மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள் சேர்
95. மேன் மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்


ஆத்தி சூடி முற்றிற்று

Monday, April 21, 2008

தமிழ் சொற்கள் பயன்படுத்துவோம்!

தமிழ் சொற்கள் பயன்படுத்துவோம்!

வார்த்தை - சொல்
தினமும் – அன்றாடம், நாள்தோறும்
ஜாஸ்தி – அதிகம்
கம்மி – குறைவு
கஷ்டம் – சிரமம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
தயார் – ஆயத்தம்
சாதம் – சோறு
நிஜம் – உண்மை
சூப்பர் - அருமை, பிரமாதம், அசத்தல்
இஷ்டம் - விருப்பம்
வாபஸ் – திரும்ப
மாமுல் – வழக்கம்
அவசியம் – தேவை
மைதானம் – திடல்
சுத்தம் – தூய்மை

லஞ்சம் - கையூட்டு
பரவாயில்லை - தாழ்வில்லை
காலம் - நேரம், பருவம் (பயன்படுத்தும் சூழலைப் பொறுத்து)

அனுமதி - உத்தரவு

புத்தகம் -நூல்
சேவை -தொண்டு
நகர் - பட்டினம்
சர்ச்சை - விவாதம்

லாயக்கு - ?

ஆபத்து - ?

வாடகை - ?
சொர்க்கம் - ?
நரகம் - ?
கௌரவம் - ?
நாகரீகம் - ?
விஷயம் - ?

பிசி - ?

ஃபிரி - ?

மேற்கண்ட சொற்களில் ஏதேனும் பிழையிருப்பின் என் மின்னஞ்சலுக்கு bas.balaji@gmail.com தெரிவிக்கவும். உடனே மாற்றி விடுகிறேன். வேறு ஏதேனும் புதிய சொற்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள்! நன்றி!!!

தமிழ் எண்கள் - தெரிந்து கொள்வோம்!

தமிழ் எண்கள்
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

Thursday, April 17, 2008

விதை

விதை முளைக்கவில்லையெனில் அதற்கு

விதை மட்டும் பொறுப்பல்ல,

சில நேரம் விதை

சில நேரம் விழுந்த இடம்

சில நேரம் சூழல்

அதற்காக விதைப்பதை விடாதே

அந்தச் சில நேர சிக்கல்களை அறிந்து

சரியானதை விதை

உன் எல்லா விதையும் முளைக்கும்!