Sunday, October 19, 2008

ஔவையார் நூல்கள் -- மூதுரை

மூதுரை
வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு.
நூல்
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்றுதளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்தலையாலே தான் தருதலால். 1நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்நீர் மேல் எழுத்துக்கு நேர். 2இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்இன்னா அளவில் இனியவும்- இன்னாதநாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமேஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்குசுட்டாலும் வெண்மை தரும். 4அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றிஎடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்தஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்பருவத்தால் அன்றிப் பழா. 5உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்தளர்ந்து விளையுமோ தான். 6நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்றநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்குலத்து அளவே ஆகும் குணம். 7நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்கநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடுஇணங்கி இருப்பதுவும் நன்று. 8தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்றதீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடுஇணங்கி இருப்பதுவும் தீது. 9நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றிஏற்ற கருமம் செயல். 11மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிதுமண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்உண்ணீரும் ஆகி விடும். 12கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவேநீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறியமாட்டாதவன் நன் மரம். 13கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழிதானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி. 14வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரிஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்கல்லின் மேல் இட்ட கலம். 15அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்வாடி இருக்குமாம் கொக்கு. 16அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவேஒட்டி உறவார் உறவு. 17சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்றுஅல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரியபொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்நாழி முகவாது நானாழி-தோழிநிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்விதியின் பயனே பயன். 19உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டாஉடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவாமாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்அம் மருந்து போல் வாரும் உண்டு. 20இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லைஇல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்புலி கிடந்த தூறாய் விடும். 21எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்முற்பவத்தில் செய்த வினை. 22கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்துநீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமேசீர் ஒழுகு சான்றோர் சினம். 23நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்காக்கை உகக்கும் பிணம். 24நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்கரவிலா நெஞ்சத் தவர். 25மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லியவாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமேஇல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்மனம் சிறியர் ஆவரோ மற்று? 28மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்லஉருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தைஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்துபோம் போது அவளோடும் போம். 29சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரைஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்துமறைக்குமாம் கண்டீர் மரம். 30மூதுரை முற்றிற்று

No comments: