Sunday, August 26, 2012

எறிபந்து


எறிபந்து

உடல் தின்னும் பசி
உயிர் சுருக்கும் உணவு
உடல் முயங்கிப் பிழை
உயிரின் மிச்சமாய் உறவுகள்
தன்னை விழுங்கும் நிழல்
தேவை மிஞ்சும் தேடல்
என்னை எழுதியவன் நீ
நின்னை அறியாமல் நான்
மனதைப் படிப்பவன் நீ – உன்னிடம்
மறைத்ததாய் நம்பும் மடையன் நான்
கள்ளமின்றி அனுப்பி வைத்தாய்
தற்காலிக தங்கல் முடிந்து
பாவமூட்டையோடு திரும்பி வருவேன்
மன்னிப்பாயா….

No comments: