Sunday, August 26, 2012

நீ வருவாய்! நீ வருவாய்!


நீ வருவாய்! நீ வருவாய்!



நீ வருவாய்! நீ வருவாய்!
------------------------------------

காலை - உன் வருகையின் முன்னறிவிப்பாய்
சாலை கழுவப்பட்டிருக்கிறது
மதியம் மந்தமாகி உன்
அருகாமை உறுதியானது
மாலையில் குளிர் தென்றல்
மெல்ல சன்னல் நுழைய….
இதழ் பிரிக்காமல் ஒரு 
இன்பச் சிரிப்பு மனதிற்குள்


மீண்டும் உனைக் காணப் போகிறேன்... 
ஆண்டில் ஒரு முறையே உன் வருகை
ஆவலோடு காத்திருக்கிறேன் நான்….
குளிர்காலத்தை தொடங்கி வைக்க
வா மழையே வா….
மகிழ்ந்தே என் மகளுக்கு
உனை நான் காட்ட….

http://balaphotoblog.blogspot.com/2011/08/sun-rays.html

2 comments:

Shankar M said...

Good thinking...

Balaji said...

இங்க இப்படித்தானே சிந்தனை வருது :-)