Sunday, August 26, 2012

இறைவா நீ அனைத்தும் அறிந்தே இருக்கிறாய்....


இறுக்கமாய் இருக்கிறது
முழுவதும் நிரம்பி விட்டேன்
ஒற்றைப் புள்ளியில் உயிராகி
இதோ உருவம் பெற்றேன்
இனி உலகம் பார்ப்பேன் 

காற்றில் பறப்பேன்
மேகம் முட்டி ரசிப்பேன்
தென்றலில் தவழ்வேன்
எத்திசையும் எனக்கு சொந்தம்
இனி உலகம் பார்ப்பேன்

மூடியிருக்கும் கூட்டை என் 
முழு பலத்தோடு முட்டுகிறேன்
உடைத்து விடுவேன் 
இனி உலகம் பார்ப்பேன்

ஐயோ,
எதிர்பாராத காற்று
அதிர்கிறது என் கூடு
தரை தொட்டேன்
உயிர் விட்டேன்
உலகம் பார்க்கும் முன்பே
உன் அடி சேர்ந்தேன் 

இறைவா நீ அனைத்தும் அறிந்தே இருக்கிறாய்....

Inline image 1

No comments: