வாங்க உணவு வகைகள் தொடரில் பார்பிக்யூ சிக்கன் & மட்டன் பற்றிப் பார்ப்போம்...
பெரும்பாலும் குளிர்காலம் தொடங்கி விட்டால் பார்பிக்யூ செய்து சாப்பிடுவது அதிகம்... இறைச்சியை நன்கு (அவரவர் விருப்பத்திற்கேற்ப) தேவையான பொருட்கள் கலந்து, நெருப்பில் சுட்டு சாப்பிடுவதுதான் பார்பிக்யூ... என்ன பழங்காலத்துக்கு போயிட்டோம்னு பார்க்கிறீங்களா... அதான் உண்மை... பச்சையா சுட்டு சாப்பிட்டோம்... இப்ப கொஞ்சம் மசாலா கலந்து சுட்டுச் சாப்பிடுகிறோம்... :-)
பார்பிக்யூவின் பிறப்பிடம் எந்த நாடுனு தெரியல... எல்லா நாட்டையும் சொல்லலாம்... ஏன்னா எல்லாரும் ஒரு காலத்தில் சுட்டுத்தானே சாப்பிட்டிருப்போம்.... :-) ஆனா இங்க அமீரகத்தில் இதுவும் பிரபலமான உணவு வகை. இங்குள்ள பூங்காங்களிலும், சில கடற்கரைகளிலும் பார்பிக்யூ செய்ய அனுமதி உண்டு. அரேபியர்கள்,வெள்ளைக்காரர்கள், பிலிப்பினோக்கள் மற்றும் இந்தியர்கள்தான் அதிகம் பார்பிக்யூ செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.
அடுப்பு:
இதற்கென்றே பல விதமான அடுப்புகள், ஒவ்வொரு அளவிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சுமார் 30 திராம்ஸ் மதிப்புள்ள சிறிய அடுப்பிலிருந்து,
விலை அதிகமுள்ள மின்சார அடுப்புகள் வரை பல விதங்களில் கிடைக்கின்றன.
என்னதான் மின்சார அடுப்புகள் இருந்து வீட்டில் செய்து சாப்பிட்டாலும், இந்த பார்பிக்யூ வகை உணவுகளை பூங்கா அல்லது கடற்கரைக்கு சுற்றுலா போல, ஒரு விடுமுறை நாளில், நண்பர்களின் குடும்பத்துடன் சென்று செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
ஏனென்றால் இதைத் தயாரிக்க அதிக நேரம் எடுக்கும்... நிறைய நேரம் செலவிடலாம்... குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பேசி பொழுதைக் கழிக்க நன்றாக நேரம் கிடைக்கும்...
எப்படினு பார்க்கலாம்... வாங்க....
தேவையான பொருட்கள்:
அடுப்பு
சிக்கன் & மட்டன் இறைச்சி (அவங்கவங்க விருப்பம் போல :-), ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே தேவையான மசாலாக்கள் கலந்து ஊற வைத்து விட வேண்டும் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் தயாராகவே கிடைக்கும், வாங்கிக் கொள்ளலாம்.
சார்க்கொல் (நிலக்கரி)
நிலக்கரியைப் பத்த வைக்கிற சூடம் மாதிரி ஒரு பொருள்.
இவற்றையெல்லாம் எடுத்துட்டு கிளம்ப வேண்டியதுதான்.
பொதுவாக இங்கே சில பூங்காங்கள் மற்றும் கடற்கரைகளில் பார்பிக்யூ அனுமதிக்கப்பட்டிருக்கும். அங்கெல்லாம் இது போல நிலையான பார்பிக்யூ அடுப்புகள் ஆங்காங்கே அமைத்திருப்பார்கள்.
நாம் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஏற்கனவே யாராவது பார்பிக்யூ செய்து விட்டு, கங்கோடு விட்டுட்டு போயிருப்பார்கள். இல்லையென்றால் முதலிருந்து நாம், நிலக்கரியை எரித்து கங்கு உருவாக்க வேண்டும்.
இனிதான் ஆம்பிளைகளுக்கு வேலை ஆரம்பிக்கும்....
நிலக்கரியை அடுப்பில் போட்டு, அந்த சூடம் போன்ற பொருளை எல்லாப் பக்கமும் உதிர்த்து விட்டு(நன்றாக எரிவதற்கு துணை புரியும்), மண்ணெண்ணை போல ஒரு எண்ணெய் இங்கு கிடைக்கிறது, அதை எல்லாப் பக்கமும் ஊற்றி, நெருப்பு பற்ற வைத்து, சிறிய விசிறி அல்லது தட்டினால் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் நல்ல கங்காக மாறும்.
நிலக்கரியை கங்காக மாற்றுவதற்குள் பார்பிக்யூவே வேணாம், எங்கயாவது போய் ஒரு ஷவர்மா வாங்கி சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிடலாம்னு தோனும். :-) ஆனாலும் மனம் தளராம போராடி வெற்றி பெறணும்.
இதற்கிடையில் பெண்கள், இறைச்சியை ஒரு குச்சி அல்லது கம்பியில் குத்தி இப்படி தயார் பண்ணிக்கிட்டு இருப்பாங்க....
நிலக்கரி கங்காக மாறியதும், இந்த குச்சியில் கோர்க்கப்பட்ட இறைச்சியை இவ்வாறு சுட்டு எடுக்க வேண்டியதுதான். வேக வேக பக்கத்தில் நின்று கம்பியை சுற்றி எல்லாப் பக்கமும் வேக வைக்க வேண்டும். இதோ சுவையான சுட்ட கறி தயார்.
சுடுபவர்களுக்கான ஒரு எச்சரிக்கை:
இதைச் செஞ்சுக்கிட்டு இருக்கும் போதே, சுடச் சுட ஒவ்வொருத்தரா வந்து எடுத்துச் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க... நாம கடைசில சாப்பிடுவோம்னு சொல்லிட்டு, கடமையே கண்ணாகி, சுட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா, கடைசில ஒன்னும் கிடைக்காது... அதனால சுட்டுக்கிட்டு இருக்கும் போதே, அப்பப்ப நாமளும் சாப்பிட்டுக் கொள்ளணும் :-)
அடுத்து மண்டி பிரியாணி மற்றும் சில உணவுகள்...................
தொடர்ந்து வாருங்கள்...............
2 comments:
வித்தியாசமாக, வியப்பாக இருக்கு...
நிலக்கரி - சூடம் மாதிரி ஒரு பொருள் - !!!
இன்று சிக்கன்... அடுத்து பிரியாணியா... தொடர்கிறேன்...
நன்றி... இன்னும் நிறைய சாப்பாடு இருக்கு :-)
Post a Comment