Sunday, September 23, 2012

எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓர் அழகான இடம்.

எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓர் அழகான இடம். 

பெரிய ஏரி மாதிரி தெரியுது...


சாயங்கால நேரம்னு நினைக்கிறேன்... 

நீல வானம்...

நிறைய மேகங்கள்...

இளங்காத்து... 

போட்டிருக்கும் சட்டை காத்துல நல்லா ஆடுது...

மனசுக்கு நல்லாயிருக்கு....






அந்த ஏரியை ஒட்டி, அங்கங்கே மீன் வளர்ப்பதற்கு ஏற்றது போல் பாத்தி பாத்தியா குளம் மாதிரி வெட்டி வச்சிருக்காங்க....

ஒவ்வொரு சதுரமான நீர்ப்பரப்பிலும் நிறைய வகை வகையான மீன்கள்... பெரிசு பெரிசா மீன்கள்...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... 

பார்க்கப் பார்க்க அப்பிடியே என்னமோ செய்யுது... 

ஆகா போட்டோ எடுத்த நல்லாயிருக்குமே..

என் பக்கத்துல எனக்குத் தெரிஞ்ச பையன் நிக்கிறான்... 

”தம்பி வீட்டுல போய் என் கேமராவ எடுத்துட்டு வாயேன்...”

சரிண்ணேண்ட்டு ஓடிட்டான் நம்மாளு....

(அடடா கேமரா பேட்டரில சார்ஜ் ரொம்ப கம்மியா இருந்துச்சே... சரி பரவாயில்ல தீரும் வரை எடுப்போம்ல...)

அப்பத்தான் அது நடந்துச்சு... 

மேலே வித்தியாசமான ஒரு விமானம் பறக்குது, அதைத் தொடர்ந்து பின்னாடியே இன்னொரு விமானமும் பறந்து வருது.... பார்க்க வித்தியாசமா இருந்தாலும் என்னமோ மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கு அந்த பெரிய விமானங்களைப் பார்க்கும் போது.... விமானத்த கீழே ரொம்ப இறக்கி உள்ள இருக்கிற அவங்க என்னைப் பார்க்கிறாங்க... 





வீட்டுக்கு உள்ள போய் அந்தப் பக்கம் வீட்டின் முன்புறம் உள்ள சாலைக்குப் போனால், 
அங்கே சாலையின் இரு பக்கத்திலும் மக்கள் கூட்டமா நிக்கிறாங்க.... சாலையில் வகை வகையான வாகனங்கள் வேகமா போய்க்கிட்டு இருக்கு... 



அந்த வாகனங்களை ஓட்டுபவர்கள் முகம் நம்மூரு முகம் மாதிரி இல்ல அதுமட்டுமில்லாமல் அவங்க எல்லாம் ரொம்ப கோவமா இருக்கிற மாதிரி இருக்கு....



மாட்டு வண்டியெல்லாம் ஓரமா நின்னு வேடிக்கைப் பார்க்கிறாங்க...

அடடா வீட்டுக்குப் பின்னாடி ஏரிப்பக்கம் பார்த்தால் நிறைய பறவைகள், வகை வகையான பறவைகள் தீடீரென பறந்து வருகின்றன....



அடடா கேமரா எடுத்து வாடான்னு ஒருத்தனிடம் சொன்னமே... எங்க அவன காணாம்...

வேகமா ஓடிப் போய் ஏரிப்பக்கம் நின்னு பார்த்தால்... என் கேமரவா எடுத்துட்டு வந்தவன், 

சும்மா இருக்காம, என் கேமராவில் படம் எடுத்திக்கிட்டு இருக்கான்....




டேய் நிறுத்துடா...................







அலார்ம் அடிச்சிருச்சு...

இனிமே ஆங்கில சண்டைப்படமெல்லாம் பாத்துட்டு தூங்கக்கூடாதுடா சாமி.... :-))))


[நன்றி: கனவுக்கேற்ற படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து]




6 comments:

semmalai akash said...

கனவுக்கு ஒரு அர்த்தம் தேடிகிட்டீங்க அண்ணா.:-))))))

Balaji said...

ஹா ஹா ஹா... நன்றி தம்பி...

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஆங்கிலப் படங்கள் பார்த்துவிட்டே தூங்குங்கள்
அப்போதுதானே இது போன்ற அருமையான படங்களுடன்
கூடிய பதிவு கிடைக்கும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Balaji said...

நன்றி ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கனவு தான்...

இங்கே தூங்கினால் தானே கனவு....

Power cut - More than 16 Hours

Balaji said...

நல்ல கனவு தான்...

-- நன்றி...

இங்கே தூங்கினால் தானே கனவு....

Power cut - More than 16 Hours

--- இதைப் படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது நண்பரே....