Saturday, December 1, 2012

மழை -- மலை -- கடல் -- நீண்ண்ண்ண்ட பயணம்....

வணக்கம் நண்பர்களே,

UAE National Day முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை...

நேற்று ஊர் சுத்தலாம்னு முடிவெடுத்து குடும்பத்துடன் கிளம்புனோம்...

கிளம்பும் போதே நல்ல மழை... 

இடி மின்னல் மழை என இயற்கை பட்டையைக் கிளப்பியது...





துபாய் தெருவெங்கும் வெள்ளப்பெருக்கு...




செல்லும் வழியில் சில இடங்களில் கார்கள் தண்ணீருக்குள் மூழ்கி ஸ்டார்ட் செய்ய முடியாமல் கிடந்தன.... 

http://www.7daysindubai.com/pictures/PHOTOS-Rains-bring-road-chaos-UAE/pictures-17477539-detail/pictures.html இந்த லிங்கில் பாருங்க.... நான் செல்லும் வழியில் இந்தக் கார் மிதந்து கொண்டிருந்தது...



பெரிய சாலைகளில் இருக்கும் டிஜிட்டல் எச்சரிக்கைப் பலகைகளில் “Drive Slowly ,watch water ponds” என எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன...


சரி எவ்ளோ தூரம் போக முடியோமோ போய் பார்த்துட்டு வருவோம் என்று காரோட்டிக் கொண்டிருந்தேன்...

ஒரு இடத்தில் சரியான போக்குவரத்து நெரிசலில் சிக்கி 5 கி.மீ தூரத்தை ஒன்னரை மணிநேரம் ஓட்டி கடந்து சென்றோம்...ம்ம்ம்ம் ... 

Rescue Team மற்றும் Police வந்து விரைந்து செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்து வழி ஏற்படுத்திக் கொடுக்கவும், பயணம் வேகம் பிடித்தது...

செல்லும் வழியில் வானம் நீலமாகி மழை நின்றிருந்தது....




வரிசையாக பல கார்கள் சென்று கொண்டிருக்க, இதற்கு முன்பு பல முறை பயணித்த பாதைதான்... இருந்தாலும் மழை பெய்திருந்ததால் தூய்மையாக பளிச்சுனு அழகாக தெரிந்தது சாலைகள்....



செல்லும் வழியில் உள்ள  சிறு சிறு குன்றுகளை ஒட்டி உள்ள மேடு பள்ளங்களிலெல்லாம் பலர் குடும்பம் குடும்பமாக கூடாரம் அமைத்து சாப்பிட்டுக் கொண்டும், குழந்தைகளோடு விளையாடிக் கொண்டும் இருந்தார்கள்.... Four wheel drive கார் உள்ளவர்கள்  குன்றுகளின் கொஞ்சம் மேலே ஏறி மட்டமாக இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்...




எங்களுக்கும் பசி எடுக்க, நாங்களும் ஓரிடத்தில் நிறுத்தி ப்ளாஸ்டிக் பாயை விரித்து , செய்து கொண்டு போயிருந்த உணவுகளை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினோம்....  நாங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் , வெயில் காலத்தில் வந்தால், ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது.... அப்படியாகப் பட்ட மொட்டைப்பாறை... இன்றைக்கு மழை குளிரின் பொருட்டு அழகான இடமாக மாறியிருந்தது....

மேகங்கள் மெல்ல மலைகளின் மீது இறங்கவும், குளிர் கூடி, மழைத்தூறத் தொடங்க, விரைவாக உணவு உண்டு விட்டு, காரில் ஏறி பயணத்தை தொடங்கினோம்...



நெடுந்தூரப் பயணங்களுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட mp3 folderல் இருந்து இளையராஜாவின் இசை காரெங்கும் பரவிக் கிடக்க... எதோ ஒரு சொல்லத்தெரியாத மகிழ்ச்சியான உணர்வில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது....

180 கி.மீ பயணம் செய்து, நாங்கள் செல்ல வேண்டிய கடற்கரைக்குச் சென்று அமர்ந்தோம்.... 

கருமேகங்கள் மேலும் சூழ, பெருஞ்சத்தத்துடன் மழை மீண்டும் வந்தது.... 



மா வேகம் மழை வேகம் என்பார்கள்....

ஓடி வந்து காருக்குள் ஏறும் முன் ஓரளவு நனைந்து விட்டோம்...

இரவாகி விட்டது.... 

மழையின் அளவு கூடவும், முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.... ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் வந்து போக.... தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருந்தோம்... ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு எந்த வண்டியும் வரவில்லையென்றாலும், சாலை கண்ணுக்குத் தெரியாமல் போக, மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டே ஒரு வழியாக துபாய் வந்து சேர்ந்தேன்....

காலை 11.00 மணிக்கு தொடங்கிய பயணம் இரவு மீண்டும் துபாய் திரும்பி வர இரவு 10.30 ஆகிவிட்டது....


ரொம்ப மகிழ்ச்சியான ஆனால் கொஞ்சம் பயம் கலந்த பயணம்....





5 comments:

வெங்கட் நாகராஜ் said...

Seems you have enjoyed the trip. Nice experience. thanks for sharing.

வெங்கட் நாகராஜ் said...
This comment has been removed by the author.
Balaji said...

நன்றி நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயணத்தை படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

Balaji said...

நன்றி நண்பரே...