Monday, May 25, 2020

எழுத்தாளர் ஜெஸிலா பானு எழுதிய நம் நாயகம் & மூஸா (அலை) நபி வரலாறு


சிறுவயதிலிருந்து கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் படித்திருந்ததால் பைபிள் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்முதுகலைப் படிப்பு படிக்கும் காலத்தில் நண்பன் சையது அப்துல் சத்தார் மூலமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் ஒரளவுக்கு கிடைத்தது… “இஸ்லாம் மதமல்ல மார்க்கம்”, அப்பு என்று அடிக்கடிச் சொல்வான்

அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு வாக்கில், இணையத் தமிழ் நண்பர்களிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று தெரிந்தவனாகத் தொடங்கி இன்று  தம்பியாகிப் போன முஹம்மது இஸ்மாயில் புகாரி மூலமாக இன்னும் இன்னும் நிறைய இஸ்லாமிய பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டிருக்கிறேன்

பின்பு வளைகுடாவிற்கு வாழ்க்கைப்பட்ட நாள் முதல் தொடங்கி இன்று வரை பெரும்பாலும் அரேபியர்களுடன் பணிபுரியும் சூழல் இருப்பதால், நிறைய ஒப்பீடுகள் இயல்பாகவே மனதுக்குத் தோன்றும். அதன் மூலம், நம்மூரில் உள்ள சில பழக்க வழக்கங்களுக்கும் இங்குள்ள சில பழக்க வழக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகள், அரபிச் சொற்களுக்கான பொருள் என நிறைய அறிந்து கொள்ள முடிந்ததது

மேலும் ஓய்வாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், நிறையவே அரேபிய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள முடிந்ததுகுறிப்பாக ரமதான் நோன்பு தொடங்குவதற்கு சரியாக பதினைந்து நாட்களுக்கு முன், குழந்தைகளுக்கு இனிப்புகளையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்இதற்கு Haq Al Laila என்று பெயர்என் குழந்தைகளுக்கும் என் அலுவலகத்திலிருந்து அந்த நாளில் தவறாமல் பரிசுகள் கிடைக்கும்அடுத்ததாக  மண்டி பிரியாணி. எனக்கு இங்கு வந்த போது மிகவும் வியப்பைத் தந்த ஒன்று இந்த மண்டி பிரியாணிஒரே தட்டில் நான்கு ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடுவதுஇதெல்லாம் நமது ஊரில் பார்த்ததில்லை

முன்பொருநாள் நண்பர் புகாரி எனக்குப் பரிசாக குர்ஆன் அளித்திருந்தார்சில பக்கங்களைப் படித்துப் பார்த்திருக்கிறேன், இருந்தாலும் அதில் அடைப்புக்குறிக்குள் சில வார்த்தைகள் வருவதால் என்னால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லைஎப்பவும் எனக்கு இஸ்லாம் தொடர்பாக என்ன ஓர் ஐயம் வந்தாலும் உடனே நான் தொடர்பு கொள்வது புகாரியை மட்டும்தான்ஏனெனில் அவருக்கு என்னிடம் ஒரு நல்ல புரிதல் உண்டுநிறையவே அவரைப் பிராண்டியிருக்கிறேன்பொறுமையாக எனக்கு விளக்கம் அளிப்பார் 

இதெல்லாம் இருந்தாலும் பைபிள் கதைகள் போல, இஸ்லாம் பற்றிய நிகழ்வுகளைக் கோவையாக நான் இதுவரைப் படித்ததில்லை எல்லாமே வாய்வழிச் சேதிகள்தான்… 

இந்த வீடடங்கு காலத்தில் நிறைய ஓய்வு கிடைத்தது, ஆதலால் நிறைய நூல்களை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் முக்கியமான நூல்கள் நண்பர் ஜெஸிலா எழுதிய நம் நாயகம் மற்றும் மூஸாஇரண்டும் குழந்தைகளுக்கான நூல்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார், எனக்கென்னவோ, இஸ்லாமிய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் எல்லாருமே படித்துப் பார்க்க வேண்டிய நூலாகக் கருதுகிறேன் இவ்விரண்டையும்

நம் நாயகம் & மூஸா (அலைநபி வரலாறு:



முன்பெல்லாம், மாலையில் கிராமங்களில், வீடுகளில் உள்ள மூத்தவர்கள், அங்கிருக்கும் தங்கள் சிறுவர்களை அழைத்து அமர வைத்து, தங்களுக்கு கிடைதத அனுபவங்களை, சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் ஒரு கதையாகச் சொல்லி, ”அதுக்குத்தாண்டா சொல்றேன், அப்படிச் செய்யக்கூடாது இப்படித்தான் செய்யணும், அதான் நல்லதுஎன்று நீதி சொல்லி முடிப்பார்கள்இதெல்லாம் டிவி, இண்டெர்நெட் வருவதற்கு முந்திய காலம்இன்னும் சொல்லப் போனால் மின்சார வசதிகூட பெரும்பான்மையாக வந்திராத காலம்அப்படியான நீதிக் கதைகளின் வழி ஊட்டப்பட்ட நீதி இன்றும் மனதிலிருக்கும்அந்த அறமே, யாரும் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தவறு செய்யக் கூடாதென்று உள்ளிருந்து நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கும்

அதுபோலவே எழுத்தாளர் ஜெஸிலா, இறைத்தூதர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தகுந்த ஆதாரங்களுடன் இவ்விரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்நம்நாயகம் நூலைப் படிக்கும் போது, ஜெஸிலா, சிறுவர் சிறுமியர்களைக் கூட்டி அமர வைத்து கதை சொல்வது போலவேதான்  அவருடைய எழுத்து இருக்கிறதுபெரியவர்களே, உங்கள் குழந்தைகளுக்கு இந்நூலை அப்படியே வாசித்துக் காட்டினாலே போதும், தேர்ந்த கதை சொல்லியைப் போல நீங்களும் கதை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்அப்படியான எளிமையான பேச்சுத் தமிழில் இந்நூலை எழுதியிருக்கிறார்

நம் நாயகம் நூலில் மொத்தம் 63 கதைகள் இடம்பெற்றுள்ளனஇந்நூலைப் படித்து முடிக்கும் போது 63 கதைகளாக எழுதியது ஏன் என்று உங்களுக்கே விளங்கும்நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை மேற்கோள் காட்டி, அனைவருக்கும் நல்வழி போதிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் நூல் இது… 

இறைத்தூதரின் வாழ்வை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு வாழவேண்டும் என்று குழந்தைகளுக்கு, அவர்களுக்கான மொழியில் சொல்லியிருக்கிறார். நபிகள் நாயகத்தின் வாழ்வின் சில பகுதிகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவணமாக இந்நூலைப் பார்க்கிறேன்

அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்வழிச் செய்தியாகக் கேள்விப்பட்டிருந்த இஸ்லாமியக் குறிப்புகளை ஆவணமாக்க, நபிகள் நாயகம் (ஸல்) வாழ்வில் நடந்த நிகழ்வுகளை உண்மையான சான்றுகளைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார்… 

ஒவ்வொரு கதையின் கடைசி வரியைப் படிக்கும் முன்னரே அந்தக் கதைக்கான நீதி நமக்குத் தெளிவாக விளங்கிவிடுகிறதுஇறைநம்பிக்கை, தொழுகை, விருந்தோம்பலின் சிறப்பு, எல்லார் உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, தாயின் சிறப்பு, பெற்றோர்களை பேணிக்காப்பது, மனைவிக்கு மரியாதை, வாக்கினில் இனிமை, வியாபாரத்தில் நேர்மை, தர்மம் செய்தல், கோபம் தவிர்த்தல், கடனில்லா வாழ்வு, அனைவருக்கும் ஒரே சட்டம், கல்வியின் சிறப்பு என நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் இறைத்தூதரின் வாழ்வில் இருந்து எடுத்துக்காட்டி அதை அறிவுரை போலல்லாமல் இனிமையான கதையாகச் சொன்ன விதம் அருமை

குழந்தைகளுக்கான கதை சொல்லும் போது இப்படித்தான் சொல்ல வேண்டும்இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் ஒரு கதை இருந்தால் அதைப் படிப்பதற்குள் குழந்தைகளுக்கு அயற்சியாகி விடும்இந்நூலில் உள்ள எல்லாக் கதைகளும் அவ்வாறே குறைவான பக்கங்களுடனும், ஆனால் சொல்ல வேண்டிய செய்தியை மிகவும் தெளிவாக, அளவான, குழந்தைகளுக்கு புரியும்படியான மொழியில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கின்றன

நூலில் மிகவும் கவர்ந்தவை; எளிமையான பேச்சுத் தமிழ், நூல் வடிவமைக்கப்பட்டிருக்கும் முறைகுழந்தைகளை ஈர்க்கும் வண்ணம், வண்ணமயமாகவும், படங்களுடனும், நல்ல எழுத்துருவுடனும் கொண்ட வடிவமைப்பாகும். நூலைப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் ஐயப்பாடு இருக்குமாயின் அதைத் தீர்க்கும் பொருட்டு நூலின் இறுதியில் தேவையான குறிப்புகளும், இந்த 63 கதைகளில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குத் தொடர்புடைய ஹதீஸ்களையும் சான்றுகளாக குறிப்பிட்டிருக்கிறார்கள்மதம் என்பதற்கு அப்பாற்பட்டு, ஒரு வாழ்வியல் முறை நன்னெறி நூலாக அனைவரும் படிக்க வேண்டிய நூல் நம்நாயகம் என்பது என் கருத்து



மூஸா நூல் படிப்பதற்கு மிகவும் ஆர்வத்தைத் தூண்டிய நூல்… 
ஏனெனில் மோஸஸ் என்ற பற்றி  பெயரில் ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருக்கிறேன்… சிறுவயதில் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துச் சென்று ”டென் கமாண்ட்மெண்ட்ஸ்” திரைப்படம் காட்டினார்கள் 
என்ற ஞாபகம். திரைப்படமாக வந்திருப்பதால் மூஸா என்ற மோசஸ் பெயர் கேட்டால் 
அனைவருக்கும்குறிப்பாக கிறிஸ்தவ பள்ளிகளில் படித்தவர்களுக்கு,மோஸஸ் பெற்ற பத்துக் கட்டளைகளும் , செங்கடலைத் திறந்து 
மோஸஸ் மக்களைக் காப்பாற்றிக் கூட்டி வந்ததும் நினைவிருக்கும்இந்நூலில் ஜெஸிலா, மூஸா (அலை) வாழ்க்கை வரலாற்றை எளிய மொழியில் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் எழுதியிருக்கிறார்… 

இந்தக் கதையைப் படிக்கும் போது எனக்கு கம்சன் மன்னன் & கண்ணன், ஏரோது மன்னன் & இயேசுகிறிஸ்து மற்றும்  கர்ணன் கதையும் ஞாபகத்திற்கு வந்து போனதுஅழிவிற்கு இந்தக் குழந்தைதான் காரணம் என்றறிந்த மன்னர்கள், ஊரிலுள்ள குழந்தைகளையெல்லாம் கொல்லச் சொல்வது எல்லா வரலாறுகளிலும் ஒன்று போலவே இருந்திருக்கும் போலகர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டதைப் போல, மூஸா(அலை) வும் ஆற்றில் பெட்டியில் விடப்படுகிறார்.

இந்நூலில் மூஸா (அலை) பிறந்ததிலிருந்து அவர் மரணம் வரை நடந்த நிகழ்வுகளையும், அவர் வாழ்க்கையின் வழியாக நமக்கு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும் மிகத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜெஸிலா

இந்நுலைப் படிக்கும் மூஸாவிடம் ஃபிர்அவுனைச் சேர்ந்தவர்கள் பொய் வாக்குறுதி கொடுப்பதும் அதன் விளைவாகக் இறைவன் கோபம் கொண்டு கொடுத்த தண்டனைகளாக மழை வெள்ளம் அழிவு, தண்ணீரெல்லாம் இரத்தமாவது, வெட்டுக்கிளிகள் வந்து பயிர்களை அழிப்பது, எங்கும் தவளைகள், பேன்கள் பற்றி எல்லாம் சிறுகுழந்தைகளுக்குச் சொல்லும் போதும் அவர்கள் வியந்து படிப்பார்கள்

இது போன்ற கதைகளைப் படிக்கும் போது, உலக வரலாற்றில் நடந்த ஈவு இரக்கமற்ற கொலைகள் மிரட்டுகின்றனஅதிகாரம் கொண்ட மனிதன் தன்னைக் கடவுளாக கற்பித்துக் கொண்டு செய்த கொடுமைகளைக் கதைகளாகப் படிக்கும் போது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை எவ்வளவு அச்சமுள்ளதாக இருந்திருக்கும் என உணர முடிகிறது

ஃபிர்அவுன் மன்னனின் உடல் இன்றும், எகிப்தில் பாதுகாக்கபட்டு வருகிறது என்பது எனக்கு வியப்பான தகவல். மூஸா (அலை) வாழ்வில் செய்த நிறைய அற்புதங்களைப் பற்றி நூலில் வருவதால் குழந்தைகளுக்கு இந்நூலை வாசிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்

நம் நாயகம் நூலை ஒப்பிடும் போது மூஸா (அலை) நூலில் ஜெஸிலாவின் எழுத்து இதில் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறதுபேச்சுத் தமிழில் இது அமையவில்லை என்றே தோன்றுகிறதுஆனாலும் எளிமையாகப் புரியும்படியான எழுத்தாக இருப்பதால் தங்கு தடையின்றி விரைவாகப் படிக்கவும் அதே நேரத்தில் படித்த கதையும் அதன் கருத்தும் மனதில் பதிந்து விடுகிறது

இப்படியாகத்தான் எழுத்து இருக்க வேண்டும்.. அதும் குழந்தைகளுக்கான கதை சொல்லல் இப்படியாகத்தான் இருக்க வேண்டும்

மீண்டும் சொல்கிறேன், இந்த இரண்டு நூல்களும் குழந்தைகளுக்கான நூல்கள் என்கிறார் எழுத்தாளர். என்னைப் பொறுத்தவரை மதங்களுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாமிய வாழ்க்கை முறையையும், அதிலுள்ள நன்னெறிகளையும் அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்

நம் நாயகம்
மூஸா (அலை) நபி வரலாறு
(மூஸாஇந்நூல் சார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது)

இன்னும் நீங்கள் நிறைய இதுபோல எழுதவேண்டும் ஜெஸிலாமகிழ்ச்சிவாழ்த்துகள்